Monday, February 1, 2010

விடைபெறுதல்

Because of some technical glitches, I am not able to put up this website in certain aggregators like Tamil manam. I am therefore merging the posts here to my other blog, which I originally intended for poetry appreciation, but now, using it for multi-purpose: www.thirumullaiyvaayil. blogspot.com.

Thank you for reading friends.

இடுகையும் இட்டவரும்! ஜீவன் சிவத்துக்கு ஒரு மறுமொழி!

நான் பின்னூட்டங்கள் பலபதிவுகளில் இட்டுவருகிறேன். எங்கு பாராட்ட வேண்டுமோ அங்கு செய்து, எங்கு குறைகளச் சுட்டிக்காட்ட வேண்டுமோ அங்கு அதையும் செய்து வருகிறேன். பாராட்டை ‘லபக்’கென்று விழுங்கியவர்கள், குறைகளைச் சொன்னவுடன் ‘அதை மேதாவித்தனம்’ என்று விமர்சிக்கிறார்கள்.

இருநாட்களாக ஜீவன் சிவன் என்பவரின் வ்லைபதிவில் எனக்கு இதுதான் நேர்ந்தது. இன்னொரு வலைபதிவிலும் நேர்ந்தது அது ஈரோடு கதிரின் வலைப்திவில் - அதைப்பற்றி தனி இடுகை வேண்டும். இங்கே ஜீவன் சிவனின் கருத்தை மட்டும் பார்ப்போம்.

இதற்குமுன் ஒரு பொதுக்கருத்து, யாதெனில், பின்னூட்டமிடுவோர் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசச்சொற்களால் இடுவது கண்டனத்துக்குரியது. இதில் இருகருத்துகளுக்கு இடமில்லை.

இதுவல்ல பிரச்ச்னை ஜீவன் சிவத்துக்கு. அவரின் கருத்துப்படி, (’கொம்பு முளைத்த சில பதிவர்கள்” என்ற அவரின் இடுகையைப்பார்க்கவும்) இடுகை வேறு, இட்டவர் வேறு. பின்னூட்டமிடுவர் உணர்ச்சிகளைக்காட்டக்கூடாது. பின்னூட்டமிடுப்வர்கள், பதிவாளருக்குப் பிடிக்கா வண்ணமிடுவாராயின், அவர்கள் ‘அழையா விருந்தாளிகள்’

இக்கருத்துகளைப்பார்ப்போம்:

அழையா விருந்தாளிகள் என்றால், என்ன பொருள்?

பதிவர்கள் அழைத்தவர் மட்டுமே பின்னூட்டமிடவேண்டும். இது சாத்தியம்தான். பதிவுகளில் ‘என் வலைபதிவில் பதிவு (ரிஜிஸ்தர்) பண்ணியவர்களே நுழைந்து படித்து பின்னூட்டமிடலாம்’ இதில் யாரை ஏற்றுக்கொள்வது, யாரை மறுப்பது என்பது பதிவாளரின் தன்னிச்சை. இப்படி யான் சில பதிவர்களிடம் கண்டதுண்டு. எடுத்துக்காட்டு: தேசிகன் என்பவரின் பதிவு. அவர் அங்கு தனக்குப்பிடித்தவர்களை மட்டும் அனுமதிப்பார். இத்ற்கு காரணம் அவர் ஒரு வைதீக பார்ப்பனர்; வைதீக மதக்கருத்துகளை அவர் எழுதுவது, இந்த் so-called திராவிட பதிவர்களோ, அல்லது இந்த so-called பார்ப்பன எதிர்ப்பாளர்களோ உள்ளுழைந்து அவரை சரமாரியாகத் திட்டி பின்னூட்டமிடுவார்கள் என அச்சம் கொண்டு அப்படி செய்கிறார். இதனாலேயே, அவர் தன்னை தமிழ்மணத்தில் விளம்பரம் செய்வதில்லை.

தமிழ்மணத்தில் வழியாக பிறர் கவனத்தைக்கவருவோர், இப்படி இது என் நண்பர்களுக்காக மட்டும் எனச் சொல்லி இடுகை இடலாமா? ஆமென்றால், அது தமிழ்மணத்திரட்டியைத் துர்பிரயோகம் பண்ணுவதாகும்.

தமிழ்மணத்தில் வருபவை திறந்த நூல்களைப்போலிருக்க வேண்டும். அவற்றை எவரும் படித்து இன்புறலாம்; அல்லது, ‘சே’ வெனத் தூக்கி எறியலாம். பின்னூட்டமிட்டு தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இங்கு அழையா விருந்தாளிகளாக வந்து பின்னூட்டமிடுகிறார்கள் என்று ஏன் அலற்வேண்டும்? பின்னூட்டமிடுவர் அருவருப்பாக இடுகிறார் என்றால், அதைத் தடுக்க கருவி உள்ள்தே? ‘அருவருப்பு’ என்றால் என்ன? ஆபாசச்சொல் என்றாலோ, அல்லது தனிப்பட்ட முறையில் பதிவரைத் திட்டினாலோ, அருவருப்பு எனலாம். ஆனால், மாறுபட்ட கருத்தை ‘அருவருப்பு’ என்றால், நீஙக்ள் ஏன் பொதுயிடமாக தமிழ்மணத்திரட்டியில் இடுகிறீர்கள்?

இப்பதிவு நீண்டதால், என் அடுத்த பதிவில் ஜீவனின் ‘இடுகை வேறு: இட்டவர் வேறு’ என்ற வாதத்தை எடுப்போம்.

Friday, September 11, 2009

திராவிடப்பதிவர்களும், ஆரியப்பதிவர்களும்!



ஒரு சில மாதங்களாக நான் வலைபதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன். சில சுவையானவை. சில கரிப்பானவை. இனிப்பும் கரிப்பும் கலந்ததுதானே வாழ்க்கை ?


சாதிப்பிளவுகள் உண்டு நம் தமிழ்நாட்டுமக்களிடையே. ஆனாலும் மக்கள் ஒன்றாகத்தான் வாழ்கின்றனர். அஃதாவது, அவரவர் இனக்கூட்டத்திடையே. பிறரிடம் பழகும்போது, நல்லவராயிருப்பின், நன்றாக, மற்றவராயிருப்பின் பட்டும்படாமலுமாக. இப்படியாக மக்கள் வாழ்க்கையோடிக்கொண்டிருக்கிறது. இதற்கு, இன்னொரு கரணியம், நேருக்குநேர் எனவரும்பொழுது, தங்கள் கரிப்பைத் தமக்குள்ளே வைத்துக்கொள்வர். அதுவும் சரிதான். சகிப்புத்தன்மையே அது.


எங்கு நேருக்குநேர் என வராதோ, அங்கு, இத்தன்மை ஓடிப்போய், தன் ஆழ்மன வெறுப்பு திறந்து காட்டப்படுகிறது.

வலைபதிவாளர்கள் இனக்குழு மனப்பானமை அப்படித்தான். ஆனாலும், இங்கு ஒரு சிறப்பு என்னவெனில், பல பிரிவுகள் வெளிச்சமூகத்தில் இருக்கின்றன. தெரிகின்றன. இங்கோ, இரண்டே இரண்டுதான். பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர்.


தற்போது, யுவகிருஷணா என்பவருக்கு எதிராக இன்னொருவர் (தமிழ் எண்ணங்கள்) எழுதியிருந்ததை படித்தபோது, அப்பதிவாளர், இவரை, திராவிடப்பதிவர்கள் கூட்டத்தலைவர் என எழுதுகிறார். அப்பதிவாளரும் அவருடன் யாவர் எனப் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் பார்ப்பனப்பதிவர்கள் என வருகிறது.


மேலும், ஆராய்ந்தபோது, எனக்குத் தெரிய வந்தவை இவை:


திராவிடப்பதிவர்கள் என்றால்:


1. பெரியாரைப் போற்றுபவர்

2. திராவிடக்கட்சிகளையும் தலைவர்களையும் முழுக்கமுழுக்க சரியெனச் சொல்லாவிட்டாலும், கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டார்.

3. பெரியார்தொண்டர்களென்றால், இந்துமதம் முழுக்கமுழுக்க வெறுக்கப்படவேண்டிய ஒன்று.

4. மற்றவர்கள், தமிழ், தமிழர்கள், தமிழர் பண்பாடு, தமிழரின் பாரம்பரியம் என்பவைகளை போற்றுவார். நையாண்டியோ, கேலியோ பண்ணுவதில்லை.

5. தமிழறிஞர்களைப் போற்றுவார்.

6. இந்துக்களாயிருப்பினும், வடமொழிச்சொற்களை ஆங்காங்கே

ஏற்றுக்கொள்ளினும் கூட, தமிழ் வாழ்க, வடமொழி ஒழிக என்பார்.


பார்ப்பனப்பதிவர்கள் என்றால்:


1. வடமொழியே கோயிலில் புழங்கவேண்டும்.

2. வடமொழியில்லாமல் தமிழ் இல்லை.

3. தனித்தமிழ் என்றாலே இவருக்குப் பற்றிக்கொண்டுவரும்.

4. பெரியார் பரம எதிரி.

5.பெரியாருக்கு கொள்கை, பார்ப்பனத்துவேசத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

6. திராவிடம் என்ற சொல்லே ஆகாது.

7. ஆரியர்கள் என வெளியில் சொல்லார். ஆயினும் ஆங்காங்கே அச்சொல் தலைதூக்கும். திராவிடப்பதிவர் என அவரைச் சொன்னால் இவர் திராவிடப்பதிவர் இல்லையென்றாகிறது.

8. மூடநம்பிக்கை சாடப்பட்டால், அது இந்துமதத்தைச் சாடப்பட்டாதாகும் இவருக்கு.

9. இந்து மதம் சாடப்பட்டால், பார்ப்பனர் சாடப்பட்டதாகும் இவருக்கு. வருணக்கொள்கை சரி எனச் சாதிப்பார். அப்போத்துதானே, தன்னைப் பிராமணன் எனக்கூறிக்கொள்ள முடியும்!

10. இவையனைத்தும், பார்ப்பனத்துவேசமாகும்.

11. நாத்திக வாதம் பார்ப்பனத்துவேசமாகும்.

12. இவர் வலைபதிவுகளில், பாரதியார் படம் இருக்கும்.

13. இவரைப்பொறுத்தவரை பாரதியார் தமிழரின் கவிஞரல்ல. அவர் பார்ப்பனத்திலகம் எனவே, அவரைப் பெருமையுடன் நோக்குவார்.

14. இவர் வலைபதிவுகளின், இந்துத்துவா வலைபதிவர்களுக்கு தொடர் கொடுத்துவிடுவார்.

15. இந்து புனிதர்கள் அனைவரும் இந்துத்தீவரவாதிகள் என நினைப்பின்படி, அரவிந்தர் எழுத்துகளையும் படத்தையும் போட்டு, மற்றமதததினரை வசைபாடுவார்.

16. தேசியம் பேசுவார். நாட்டுப்பற்று மிகவும். திராவிடபதிவர்கள் நாட்டைக்காட்டிக்கொடுப்போர் என வசைபாடுவார்.

17. இவர் பின்னூட்டங்கள் இவரைப் போன்றோரின் வலைபதிவுகளிலேயே நிகழும்.

18. ஒருவருக்கொருவர் துணை.

19. அவர்கள் மட்டுமே தமக்குள் சிலாகித்துப்பேசிக்கொள்வர்.

20. இவரின் கொள்கைகளை ஏற்ற பார்ப்பனரல்லாதோர் இவரால் மதிக்கப்படுவார்கள்.

(இன்னும் நிறைய சொல்லலாம். போதும்.)

இவ்விரு குழுக்கள் தாண்டி மற்றவர் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

பதிவர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்று நல்ல பதவிகளிலும் இருப்பவர்கள்.

இதைப்படித்துவிட்டு என்னை திராவிடபதிவருள் இவர் ஒருவர் என்று முத்திரையிடப்பட்டால் வியப்பொன்றுமில்லை.

Followers